| 
இறைச்சி / கறிக்கோழி 
இறைச்சிக்  கோழிகள் என்பவை 
இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள்  
வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் 
பயன்படுத்தப்படுகின்றன. பண்ணை / கொட்டகை அமைப்பு 
ஒரு  குஞ்சுக்கு 930 செ.மீ 2 
என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற  கொட்டகைப் பராமரிப்புகள் 
முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன. உணவூட்டம் 
2  வாரம் வரையிலும் 5 செ.மீ 
அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக்  
கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 
தீவனத்தொட்டியை  பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக 
இருப்பின் 100 குஞ்சுகளுக்கு  12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து
 அளிக்கவேண்டும். 
இறைச்சிக் கோழித்  தீவனக்கலவை 
 
இது தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட  அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம். 
நீர் 
 
இறைச்சிக் கோழிக்கான  தடுப்பூசி அட்டவணை 
 
குஞ்சு பொரிப்பதற்கான  முட்டை உற்பத்தி 
இதற்கென  சேவல்கள் தனியே 
பராமரிக்கப்படவேண்டும். 100 பெட்டைக் குஞ்சுகளுக்கென 15 சேவல் குஞ்சுகள்  
வளர்க்கப்படவேண்டும். இந்த 15 குஞ்சுகளில் 10 வார வயதில் 12 சேவல் குஞ்சை 
மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும்.  கலப்பிற்காக எடைக் குறைந்த இனமாக 
இருந்தால் 10-15 பெட்டைக் குஞ்சுகளுடன் ஒரு சேவலையும்,  எடை மிகுந்த  இனமாக
 இருந்தால் 6-8 பெட்டைகளுக்கு  ஒரு சேவலையும் விடலாம். கலப்பிற்கு விட்ட 2 
வாரங்களுக்குப் பிறகு முட்டையை சேகரிக்கத்  தொடங்கலாம்.  முட்டைகளை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை சேகரிக்க வேண்டும். சேகரித்த முட்டைகளை 1016 டிகரி செல்சியஸ் வெப்பநிலையில் 70-80 சதம் ஈரப்பதமுள்ள இடத்தில் வைக்கவும். முட்டைகளின் எடை, நிறம், தன்மை, வடிவம் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பிரித்து வைக்கவும். சேமித்து வைக்கும் போதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் போதும் கவனமாக அகண்ட பகுதியைத் தொட்டுக் கையாளுதல் வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அடை காக்கவோ அல்லது முட்டை சந்தைக்கோ அனுப்பி விடலாம். 1 வார காலத்திற்கு மேல் சாதாரண சூழ்நிலையில் அடை காக்கும் காலம் 21 நாட்களாகும். குஞ்சு பொரிப்பதற்கான குறிப்பிட்ட, காற்றோட்டமும், மித வெப்பநிலையும் கொண்ட சூட்டில் நிலவவேண்டும். 
குஞ்சு பொரிக்கத்  தகுந்த சூழ்நிலை 
 
(ஆதாரம்:  கேரளா வேளாண் பல்கலைக்கழகம்) ஒளியில் கருவளர்நிலைக் காணல் 
அடைகாத்தலின்  போது இரு முறை 
இவ்வாறு ஒளியில் வைத்தல் வேண்டும். முதல் முறை 7வது நாளிலும் இரண்டாவது  
முறை 18-19வது நாளிலும் ஒளி அளித்தல் அவசியம். இவ்வாறு 18 வது நாளில் 
ஒளியில் கருவளர்நிலைக்  கண்டபின் குஞ்சு பொரிப்பகத்திற்கு மாற்றி விடலாம். நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் 
ஆயிரக்கணக்கில்  கோழிகளை ஒரே 
இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு  
இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை 
இன்றியமையாததாகிறது.  அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன. 
 
பூஞ்சை நச்சு  / காளான் நச்சு 
கோழிக்குஞ்சுகளின்  
தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி 
வளர்ச்சியைப்  பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், 
கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை  விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை 
அதிகம் பாதிக்கிறது. எனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத் தீவனத்தில் கலப்பதும் சிறந்தது. கிருமிநாசினிகளும் பயன்பாடும் 1.லைசோல் 
1-2  சதவிகிதம் கரைசலைப் 
பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள்,  
நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.  2.சுண்ணாம்புப் பொடி 
சுவர்களைச்  சுத்தம் செய்யப் பயன்படும் மலிவான கிருமிநாசினி 2-5 சதவிகிதம்  
 
கரைசல்  கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது.  தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும். 3.சலவை சோடா 
இது  கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. 4.ஃபினால் 
நச்சுத்தன்மை  குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும்  சுத்தப்படுத்தலாம். கோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள் 
 
கூடானது  அறை போல இருட்டாகவும்,
 நல்ல காற்றோட்டத்துடன்  கட்டிடத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில் 
அமைந்திருக்கவேண்டும். கூடுகள் மலிவான மரத்தாலான  30x30x40 செ.மீ அளவில் 
அமைந்திருக்கலாம். சுத்தமான 1 கூடு என்றவாறு அமைக்கலாம். சுத்தமான  
கூடுகளைப் பயன்படுத்தி அவற்றை அவ்வப்போது மாற்றவேண்டும். தேவைப்படின் 
கூளங்களை மாற்றிவிடவேண்டும். ஒளி 
சரியான ஒளி அளவு முட்டையிடும் 
கோழிகளுக்கு  மிகவும் அவசியம். வளரும் கோழிகளுக்கு இல்லாவிட்டாலும் 
முட்டையிடும் வளர்ந்த கோழிகளுக்கு  22வது வாரத்திலிருந்து வாரத்திற்கு 15 
நிமிடங்கள் என்று மொத்தம் 16 மணி நேரம் (செயற்கை  மற்றும் இயற்கை ஒளி) 
ஒளிக்காலம் அளிக்கப்படவேண்டும். 6 மாதத்தில் முட்டையிடும் கோழிக்கு  17 மணி
 நேரம் ஒளியானது நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட 
இடைவெளியில்  நாளொன்றுக்கு 17 மணி நேரம் ஒளி கோழிகளுக்குக் கட்டாயம் 
வழங்கப்படவேண்டும். தீவன மேலாண்மை 
முட்டையிடும்  கோழிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரைக்கப்பட்ட தானியங்களை உணவாகக் கொடுக்கவேண்டும். முட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம் 
 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Thursday, 31 October 2013
 14:19
14:19
 Unknown
Unknown
Subscribe to:
Post Comments
                            (
                            Atom
                            )
                          

 Posted in
                              Posted in 
                              
 
 
 
 
 
 
 
 
 
 
 
0 comments :
Post a Comment