Thursday 31 October 2013

கோழி :
முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்
கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
எனவே பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.

அடைகாத்தல்
வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.

ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.

கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.
Incubator
அடைகாத்தல்

முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்
5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.
(ஆதாரம்: வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்).
குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு
அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
Incubator_hatchery
குஞ்சு பொரிப்பகம்
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.

பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.

(ஆதாரம்: டாக்டர்.ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)
காடை
இனப்பெருக்கம்
காடைகள் 7 வார வயதில்  முட்டையிட ஆரம்பித்து, 8வது வாரத்தில் முட்டை உற்பத்தி 50 விழுக்காடு நிலையை அடையும். பொதுவாக காடைகள் மாலை நேரத்திலேயே முட்டைகளை இடும். கோழிக்குஞ்சுப் பொரிப்பகத்தை சரியானபடி மாற்றம் செய்தால் அதிக காடை முட்டைகளை அடை வைக்கலாம். அடைவதைத 18வது நாள் காடைக்குஞ்சுகள் வெளிவரும். 500 பெண் காடைகளைக் கொண்டு வாரத்திற்கு 1500 காடைக்குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
Icubator_Quail
காடை முட்டைகள்


கோடைக்காலத்தில் காடை அடை முட்டைகளைக் குளிர்ந்த சூழ்நிலையில் சேமித்து வைக்கவேண்டும்.
வாத்து
முட்டை வாத்துக்களின் அடைகாப்பு
அடைக்காப்புக் காலம் 28 நாட்கள் ஆகும். 6-8 வாரத்திற்குட்பட்ட வாத்துகள் இட்ட முட்டைகளையே குஞ்சு பொரிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். ஆண், பெண் வாத்துகளை இனச்சேர்க்கைக்கு விட்ட 10 நாட்களுக்குப் பின்பு முட்டைகள் சேகரிக்கத் தொடங்கலாம். அழுக்கான முட்டைகளை கழுவிப் பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறு கழுவுவதற்கு 27 டிகிரி செல்சியஸ் சூடான நீரில் கிருமிநாசினி உடனே உலரவைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிட வாய்ப்புள்ளது.
Incubator_duck
அடைகாப்பு

14-16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 80 சதவீகிதம் ஈரப்பதமுள்ள இடத்தில் முட்டைகளை சேகரித்து வைக்க வேண்டும். முட்டைகளை செயற்கை முறையில் பொரிக்க வைக்க செலுத்தப்பட்ட அடைகாப்பானைப் பயன்படுத்தலாம். எனினும் வாத்துமுட்டைகளுக்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே இயஞ்சூடான நீரை இரண்டாம் நாளிலிருந்து அடைக்காப்பின் 23ம் நாள் வரை தெளிக்க வேண்டும். முட்டைகளை 24ம் நாள் வரை நாளொன்றுக்கு 4 முறையாவது திருப்பிவிடுதல் வேண்டும். 24ம் நாள் முட்டைகள் அடைகாப்பகத்தில் இருந்து பொரிப்பகத்திற்கு மாற்றப்படுகிறது.
Incubator_duck_emarging
குஞ்சுபொரித்தல்


37.5 முதல் 37.2 டிகிரி செல்சியஸ் அளவு வெப்ப நிலை இருக்க வேண்டும் (99.5-99டிகிரி ஃபாரன்ஹீட்டில்) அடைக்காப்பின் முதல் 25 நாட்களுக்கு 30-31டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பொரிப்பகத்தில் கடைசி 3 நாட்களுக்கு 32.7-33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பராமரிக்கப்பட வேண்டும். முட்டைகளின் மீது கிருமிநாசினி கலந்த இளஞ்சூடான நீரை அரை மணி நேரம் நாளொன்றிற்கு என 25 நாட்களுக்குத் தெளிக்கலாம். 7ம் நாளில் ஒளியில் கருவளர் நிலை காணலாம்.
வெப்பமளித்தல்  (0-4 வாரங்கள்)
காக்கி கேம்பெல் குஞ்சுகளுக்கு வெப்ப மூட்டும் காலம் 3-4 வாரங்கள். இறைச்சிவகை வாத்துக்குஞ்சுகலான பெக்கின் போன்ற இனங்களுக்கு 2-3 வாரங்கள் போதுமானது. அடைப்பானுக்குள் இடவசதி 90-100 ச.செ.மீ அளவு ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படவேண்டும். 29-32 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை முதல் வாரத்தில் அளித்தல் அவசியம். பின்பு இது வாரத்திற்கு 3 டிகிரி செல்சிஸ் என்று 24 டிகிரி செல்சியஸ் அளவு குறைக்கப்படுகிறது (4வது வாரத்தில்).

Incubator_duck_brooding
வெப்பமளித்தல்
வாத்துக் குஞ்சுகளை கம்பி வலை அமைப்பிலோ, குளத்தின் மீதோ அல்லது பேட்டரிகளின் மீதோ வளர்க்கலாம். கம்பிவலையாக இருப்பின் 0.046 மீ2 அளவும் 3 வார வயது வரை ஒவ்வொரு குஞ்சிற்கும் அளிக்கப்படுதல் வேண்டும். 5 -7.5 செமீ (2-3 அங்குளம்) ஆழமுள்ள நீர்த்தொட்டிகள் வாத்துக் குஞ்சுகளுக்குப் போதுமானது. ஏனெனில் அதிக ஆழத்தில் குஞ்சுகள் உள்ளே விழுந்துவிட வாய்ப்புண்டு.

நோய்ப் பராமரிப்பு

வைரஸால் பரவும் நோய்கள்

ராணிக்கட்
/ வெள்ளைக்கழிச்சல் நோய்:



முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.
வயது
நோய்
தடுப்பு மருந்து
செலுத்தும் வழி
முதல் நாள்
மாரெக்ஸ்
ஹச்.வீ.டி மருந்து
தோலின் கீழ்
5-7 நாட்கள்
ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப்
லசோட்டா எப்
கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி
குடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி
குடிதண்ணீர் மூலம்
8வது வாரம்
இராணிக்கெட் நோய்
இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில்
இராணிக்கெட் நோய்
உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
(ஆதாரம்: www.vuatkerala.org)

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள்
ஏதேனும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே, கொட்டகையை புகையூட்டம் செய்து, கோழிகளுக்கு மருந்து தூவுதல் வேண்டும்.


நோய்ப் பராமரிப்பு

வைரஸால் பரவும் நோய்கள்

ராணிக்கட்
/ வெள்ளைக்கழிச்சல் நோய்:

முறையான தடுப்பூசி மற்றும் பண்ணையை சுத்தமாகப் பராமரித்தல் மூலம் நோய் வராமல்  தடுக்கலாம். பிற மனிதர்கள் உள்ளே வராமல் தடுத்தால் ஆழ்கூள முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும் இறந்த கோழிகளின் உடலை உடனே அப்புறப்படுத்தி புதைத்து விடுதல் நன்று. அப்போது  தான் அவற்றை உண்ண வரும் காக்கைகள், கழுகு போன்றவற்றிலிருந்து பண்ணையைப் பாதுகாக்க முடியும். இருவகைத் தடுப்பூசிகள் இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன. ஒன்று குஞ்சுகளிலும் மற்றொன்று வயதான கோழிகளிலும் போடப்படுகிறது. இத்தடுப்பூசி இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்டது. 6 வார வயதான குஞ்சுகளுக்குப் போடப்படும் தடுப்பூசியானது 1லிருந்து 3 வருடங்கள் வரை நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும். அதிகமான குடற்புழுக்கள் மற்றும் இரத்தக் கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு தடுப்பு மருந்துகள் பயனளிக்கிறது. முக்தேஸ்வர் என்ற தடுப்பு மருந்து அதிகம் கொடுத்தல் கூடாது. அம்மருந்து உறுப்புக்களைப் பாதித்து சில சமயங்களில் பறவைகளில் பக்கவாதத்தினை ஏற்படுத்துகிறது. இரத்தக் கழிச்சல், சரியான ஊட்டச்சத்தற்ற, குடற்புழு, பாதிப்புக் கொண்ட கோழிகள் எளிதில் இந்நோய்க்கு உட்படுகிறது.
வயது
நோய்
தடுப்பு மருந்து
செலுத்தும் வழி
முதல் நாள்
மாரெக்ஸ்
ஹச்.வீ.டி மருந்து
தோலின் கீழ்
5-7 நாட்கள்
ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப்
லசோட்டா எப்
கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி
குடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள்
ஐபிடி
உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி
குடிதண்ணீர் மூலம்
8வது வாரம்
இராணிக்கெட் நோய்
இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில்
இராணிக்கெட் நோய்
உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி
இறக்கையில் தோலின் கீழ்
(ஆதாரம்: www.vuatkerala.org)

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகள்
ஏதேனும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே, கொட்டகையை புகையூட்டம் செய்து, கோழிகளுக்கு மருந்து தூவுதல் வேண்டும்.
கோழிப்பண்ணை மேலாண்மை :

 
கோழிப்பண்ணை மேலாண்மை என்பது நல்ல உற்பத்தியைப் பெறக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றிக் கூறுவதாகும். உற்பத்தித் திறனை அதிகரிக்க நல்லப் பராமரிப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்தல் வேண்டும். இதுவே அறிவியல் பூர்வமான கோழிப்பண்ணை மேலாண்மையாகும்.
அடைக்காக்கும் வீடு
அடைக்காக்கும் இடம் அதிகத்தூசுகள் இன்றி, மழை மற்றும் ஒட்டுண்ணிகளிடமிருந்து குஞ்சுகளுக்குப் பாதுகாப்புத்  தருமாறு இருக்கவேண்டும். அடைகாப்புக் கொட்டிலில் கம்பி வலை பொருத்தப்பட்ட ஜன்னல்கள் அமைப்பது நல்ல காற்றோட்டத்திற்கு உதவும். அதிகத் தூசுகள் குஞ்சுகளுக்கு தூசுகளற்ற மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுத்தும். அதே போல் அதிக ஈரப்பதமும், கண் மற்றும் மூக்குக்குழலை பாதிக்கும் அம்மோனியா வாயு உற்பத்திக்கு வழி வகுக்கும். எனவே நல்ல தூசுகளற்ற காற்றோட்டத்துடன் கூடிய கொட்டகையை அடைகாக்கும் இடமாகப் பயன்படுத்தவேண்டும்.

சுகாதாரம்
கொட்டகையிலிருந்து அகற்றக்கூடிய தீவன, நீர்த்தொட்டிகள், கருவிகள், கூளங்கள் போன்றவைகளை நீக்கிவிட்டு ஒரு நல்ல கிருமி நாசினியைப் பரிந்துரைக்கப்பட்ட அளவில் பயன்படுத்தி கொட்டகையை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டுண்ணி மற்றும் பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்கவேண்டும். பழைய கூளங்களை நீக்கிவிட்டபின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தேவைப்படின் சிறிய அளவில் பூச்சிக்கொல்லியைப் புதிய கூளங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். மாலத்தியான் போன்ற மருந்தை தெளித்தோ, தூவிவிடுவதன் மூலமோ பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.

கூளங்கள்
மரத்தூள், நெல் உமி போன்ற கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தி 5 செ.மீ அளவிற்குக் கூளங்களை உருவாக்கவேண்டும். பூஞ்சாண் எளிதில் வளரும் பொருட்களைப் பயன்படுத்துதல் கூடாது. கூளங்கள் கட்டி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவேண்டும். அம்மோனியா வாயு உருவாகாமல் தடுக்க ஈரமடைந்த கூளங்களை உடனுக்குடன் அகற்றிப் புதிய கூளங்களை அவ்விடத்தில் போடவேண்டும்.
அடைகாப்பு வெப்பநிலை
அடைக்காப்பானில் வெப்பநிலை சரியாக இருக்க சூடுபடுத்துதல் வேண்டும். மிக அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பநிலை குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அடைகாக்கும் முதல் வாரத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் (35 டி செ) இருக்கவேண்டும். பின்னர் இது வாரத்திற்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் குறைக்கப்பட்டு 70 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கொண்டு வரப்படுகிறது. குஞ்சு பொரிக்கும் நிலையில் அடைக்காப்பான் 24 மணிநேரமாகும்.
poultry_brooder
அடைகாப்பு

தம்ப் விதியின் படி அடைகாப்பானின் வெப்பநிலை 20 டிகிரி செ ஆக இருக்கவேண்டும். ஒரு வெப்பநிலைமாயி அடை (-6.7 டி செ) காப்பானில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் குஞ்சுகளின் செயல்களைக் கொண்டும் வெப்பநிலை சரியானதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு சூடாக்கி (விளக்கு) யின் கீழ் வந்து நிற்கும். வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அவை சூடாக்கியின் அருகில் வராமல் விலகியே இருக்கும். இவ்வாறின்றி குஞ்சகள் சமமாக எல்லா இடத்திலும் பரவிக் காணப்பட்டால் வெப்பநிலை குஞ்சுகளுக்கு ஏற்ற அளவு உள்ளது என்று கணிக்கலாம். வெப்பக் காலங்களில் 3 வாரங்களுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு சூடாக்கிகள் தேவைப்படுவதில்லை. செயற்கையாக வெப்பநிலையை அளிக்கப் பல சூடாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட வடிவ முன்னும் பின்னும் நகரக் கூடிய மின்சார அடைக்காப்பான்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனும் வெப்பநிலையானது தானாகவே சரி செய்து கொள்ளப்படுகிறது. மின்சார விளக்குகளையும் சூடாக்கியாகக் பயன்படுத்தலாம். ஆனால இம்முறையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது கடினம். அகச்சிவப்பு விளக்குகளும் பயன்படுத்தலாம். அடைக்காக்கும் வீட்டிற்கு தேவையான வெப்பநிலைக்கேற்ப அகச்சிவப்பு விளக்குகளின் உயரத்தையும் எண்ணிக்கையையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
அடைக்காப்பான் இடவசதி     
ஒரு குஞ்சுக்கு 7-10 சதுர அங்குலம் (45-65 செ.மீ 2) என்ற அளவில் இடம் தேவைப்படுகிறது. 1.80 மீ அளவுள்ள அடைக்காப்பானில் 500 குஞ்சுகள் வரை அடைக்கலாம். சிறிய வெப்பக்கூடு அல்லது அடைப்பான் பயன்படுத்தும் போது அதற்கேற்றவாறு குஞ்சுகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.  அதிகக் குஞ்சுகளைக் குறைவான இடத்தில் போட்டு அடைத்தால் அவை மூச்சுத்திணறி, ஒன்றையொன்று மிதித்துக் கொண்டு இறக்க நேரிடலாம்.

அடைக்காப்பான் தடுப்பு
வெப்பக்கூண்டிலிருந்து குஞ்சுகள் அதிகத்தூரம் விலகி ஓடாமல் இருக்க 1.05-1.50 மீட்டர் தூரம் இடைவெளி கொண்டு தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வாரத்திற்குப் பிறகு இத்தடுப்புகள் தேவைப்படாது.

தரை இடஅளவு
ஆரம்பத்தில ஒரு குஞ்சுக்கு 0.05 மீ 2 அளவு இடமும் பின்பு 20 வார வயது வரை 4 வாரங்களுக்கு ஒரு முறை 0.05 மீ 2 அளவு அதிகப்படுத்திக் கொண்டே போகவேண்டும். பிராய்லர் இரகக் கோழிகளுக்கு 0.1 மீட்டர் பெட்டைக் கோழிகளுக்கும், சேவல் கோழிகளுக்கு 0.15 மீ 2 இடமும் 8 வார வயது வரை வழங்கப்படவேண்டும். பெட்டைக்குஞ்சுகளுக்கும், சேவல் குஞ்சுகளுக்கும் தனித்தனியே கொட்டில் அமைத்துப் பராமரித்தல் சிறந்தது.

நீர்த்தொட்டி அமைக்கும் இடைவெளி
கோழிகளுக்கு சுத்தமான தண்ணீர் தாராளமாகக் கிடைக்கச்செய்யவேண்டும். முதல் 2 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு 50 செ.மீ இடைவெளியில் நீர்த்தொட்டிகள் வைக்கப்படவேண்டும். 6-8 வார வயதுடைய கோழிக்குஞ்சுகளுக்கு இடைவெளியானது 150-190 செ.மீ ஆக அதிகரிக்கப்படவேண்டும். சிறிய குஞ்சுகளுக்கு குடிநீர் நீருற்றுப் போல் வழங்கவேண்டும். இந்நீரூற்றானது பின் குஞ்சுகள் வளரும் போது நீக்கிவிட்டு நீர்த் தொட்டிகள் வைக்கப்படுகின்றன. நீர்த்தொட்டிகள் கோழியின் பின்பாகத்திலிருந்து 2.5 செ.மீ உயரத்தில் வைக்கப்படவேண்டும். எதிர் உயிர்ப்பொருள்கள் அல்லது பிற மருந்துகள் பரிந்துரைப்படி தேவைப்படின் குடிநீரில் கலந்து கொடுக்கலாம். சிலக் குஞ்சுகளை  ஒன்றாகப் பிடித்து நீரை அருந்த வைத்துப் பழக்கலாம். நீர்த் தொட்டில்கள் தினந்தோறும் சுத்தம் செய்யப்படவேண்டும்.

முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல்:
 
கோழிக்குஞ்சுகளின் உருவாக்கமே அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் எனப்படுகிறது. முந்தைய நாட்களில் தாய்க்கோழியின் அடையில் வைத்தே குஞ்சுகள் பொரிக்கப்பட்டன. தேசிய இனக் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறையில் கோழிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இம்முறை 10-12 முட்டைகள் மட்டுமே 1 கோழியினால் ஒரு சமயத்தில் அடைக்காக்க முடியும்.
poultry_egg laying
முட்டையிடுதல்

எனவே பெரிய பண்ணை உற்பத்தி முறைகளுக்கும் கடினமானதாக இருக்கிறது. கோழிகளைப் போன்றே சூழ்நிலையை உருவாக்கக்கூடிய அடைகாப்பான்களில் குஞ்சுபொரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன.

அடைகாத்தல்
வெப்பநிலை, ஈரப்பதம், வாயுச்சூழ்நிலை மற்றும் முட்டைகளைத் திருப்பி விடுதல் போன்ற இயற்கைக் காரணிகள் ஒரு வெற்றிகரமான குஞ்சு பொரிப்பதற்கு அவசியம். அடைக்காப்பானினுள் வெப்பநிலையானது அதைத் தயாரிப்பவர் கூறும் அளவு வைத்துக் கொள்ளலாம். பொதுவாக மிதமான வெப்பநிலையே விரும்பப்படுகிறது. இது பொதுவாக 99.5 டிகிரி செல்சியஸிலிருந்து 100.5 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட் (37.2 டிகிரி செ - 37.8 டிகிரி செ) வரை குறைந்த வெப்பநிலை கரு வளர்ச்சியைக் குறைக்கும். (சாதகமற்ற) அசாதாரண அதாவது அதிக வெப்பநிலை நிலவும் போது வளர்ச்சியைப் பாதித்து கோழிகளில் இறப்பு வீதத்தை அதிகப்படுத்துகிறது.

ஈரப்பதம் ஒரு முக்கியக் காரணி. உலர்ந்த அல்லது ஈரப்பதமுள்ள வெப்பநிலைமானிக் கொண்டு ஈரப்பதத்தை அளக்கலாம். முட்டைப் பொரிக்க 21 நாட்கள் ஆகும். முதல் 18 நாட்களில் ஈரப்பதம் 60 சதவிகிதமும் பின்பு 3 நாட்களுக்கு 70 சதவிகிதமும் இருந்தால் தான் முட்டைகள் குஞ்சுகள் பொரிக்கும். செலுத்தப்பட்ட அடைக்காப்பான் வெப்பநிலை அதிகரிக்கும் போது ஈரப்பதம் குறையும்.

கருமுட்டைகள் அகலமான பக்கம் மேல்நோக்கியவாறு வைத்தல் வேண்டும். கூரிய முனைப்பகுதியை மேலே இருக்குமாறு வைத்தால குஞ்சுகளின் தலைக் குறுகிய முனைப்பகுதியில் உருவாக்குவதால் பொரிக்கும் திறன் குறையும். முட்டையைத் திருப்பி விடுவது பொரிக்கும் திறனை அதிகப்படுத்தும். கைகளால் திருப்பினால் நாளொன்றுக்கு 4 முறை திருப்பவேண்டும். இப்போது நவீன அடைக்காப்பான்களில் முட்டைகள் தன்னிச்சையாகவே ஒரு நாளைக்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முட்டைத்  தட்டுகள் 90 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. 18 நாட்களுக்குப் பின் எந்த ஒரு திருப்புதலும் தேவைப்படாது.
poltry_egg_incubator
அடைகாத்தல்

முட்டைப் பொரிக்கும் திறனை அதிகப்படுத்த வெவ்வேறு பொரிப்பான்களைப் பயன்படுத்தலாம். தனித்தனி பொரிப்பான்களைப் பயன்படுத்தும் போது 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், ஈரப்பதம் 70-80 சதவீதமும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு தனித்தனியாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தப்படுத்துதல், கிருமி நீக்கம் மற்றும் பிற முட்டைகளைப் பாதிக்காமல் புகை போடுதல் போன்றவற்றைச் செய்வது எளிது.

அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல்
5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.
(ஆதாரம்: வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல்).
குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு
அடைகாப்பான் மற்றும் குஞ்சு பொரிப்பகத்தை முற்றிலும் முட்டையை அதில் வைப்பதற்கு முன்னரே ஒரு முறை சோதனை செய்து ஏதேனும் குறையிருந்தால் சரிசெய்யவேண்டும். நன்கு கழுவி கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். இது நோய்ப் பரவலின் தன்மையைக் குறைக்கும்.
poultry_hatchery
குஞ்சு பொரிப்பகம்
40 சதவிகிதக் கரைசலில் 40 மிலி ஃபார்மால்டிஹைடு, 20 கிராம் பொட்டாசியம் ஃபர்மாங்கனேட் கரைசல் ஒவ்வொரு 2.8 மீட்டர் 3 இடைவெளிக்கும் அடைக்காப்பான் மற்றும் பொரிப்பகத்தினுள் ஊற்றவேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட்டை கண்ணாடி அல்லது மண்பாத்திரத்திலும், ஃபார்மலினை அதன் மீதும் ஊற்றிவிடலாம். புகையூட்டுதலை முட்டை வைப்பதற்கு முன் தினம் செய்து அறையைப் பூட்டிவிடவேண்டும். இது வெப்பநிலையை சரியாக நிர்வகிக்க உதவும்.

பொரிப்பகத்தில வேலை செய்பவர்கள் உள்ளே செல்லுமுன் குளித்து உடைகள், காலணிகளை மாற்றிக்கொண்டு செல்லவேண்டும். குஞ்சுகள் விற்பனை செய்யும் போது முறையாக இரசீது வழங்கி உடனுக்குடனே அனுப்பிவிடவேண்டும். மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் சமயங்களில் மின்சாரம் உண்டாக்கும் சாதனம் (ஜெனரேட்டர்) பயன்படுத்தலாம்.

(ஆதாரம்: டாக்டர்.ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)

முட்டையிடும் கோழிகள்:

வீடு / கொட்டகை அமைப்பு
18 வார வயதில் சரியாக வளர்ச்சியடையாத பெட்டைக் குஞ்சுகளைப் பிரித்து நீக்கிவிடவேண்டும். கொட்டகைப்படுத்தும் சமயத்தில் சரியாகப் பிரித்து விடுதல் நல்லது. பிரிக்கப்பட்ட கோழிகளை தனி அமைப்பில் வளர்த்துப் பின் முட்டையிடும் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அங்கேயே வளர்க்கலாம். சரியான அளவு இடவசதியுடன் அதிக இடம் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது முட்டையிடும் கோழி ஒன்றிற்கு 65 அடி இடம் அளிக்கப்படவேண்டும். முட்டையிடுவதற்கு 2 வாரம் முன்பு கூடுகள் அல்லது வலைப்பின்னல் அமைக்கப்படவேண்டும். அப்போது தான் கோழிகள் புதிய அமைப்பிற்கு பழகிக் கொள்ள ஏதுவாகும்.

முட்டையிடும் கோழி
பட்டைத் தீட்டிய அரிசி
13
கோதுமைத் தவிடு
4
மீன் துகள் / உலர்த்தியது
6
உப்பற்ற மீன்
6
டை கால்சியம் பாஸ்பேட்
1
உப்பு
0.25
தாதுக் கலவை
1.75
ஓடுத்துகள்
5
மொத்தம்
100.00
தீவனத்தை நீளமான தீவனப் பெட்டியிலோ அல்லது தொங்கும் அமைப்புள்ள தீவனப்பெட்டிகள் அமைத்தோ கொடுக்கலாம். 50 செ.மீ விட்டமும் 20-25 கிலோ எடைக் கொள்ளளவுக் கொண்ட தொங்கும் வகையில் அமைந்த தீவனப்பெட்டி 100 குஞ்சுகளுக்கு போதுமானது. நீர்த் தொட்டியிலிருந்து 3 மீட்டர் தொலைவில் தீவனப்பெட்டிகள் இருக்குமாறு அமைக்கவும். தீவனத்தை அவ்வப்போது நன்கு கலக்கிவிடவேண்டும்.
நீரானது 2.5 செ.மீ குறைந்த இடைவெளியில் வைக்கப்படவேண்டும். வெப்பநிலை அளவு 27 டிகிரி செல்சியஸிற்கு மேல் செல்லும் போது நீர்த்தொட்டிகளை அதிகப்படுத்தவேண்டும். தீவனத் தொட்டிகளின் மேல் முனை (நுனி) யானது கோழிகளின் பின்பாத்தியை விட சற்று உயரே இருக்குமாறு அமைக்கவேண்டும். தொட்டியின் 3ல் ஒரு பங்கு மட்டுமே தீவனம் நிரப்பவேண்டும்.
கூண்டு முறைப் பராமரிப்பு
Layer management

இம்முறையில் கோழிகளைக் கையாள்வது எளிது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்கலாம். முட்டைச் சேகரிப்பு எளிது, ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்த்தொல்லை குறைவு. பயனற்ற கோழிகளைக் கண்டு நீக்குவது எளிது போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. எனினும் ஆரம்ப முதலீடு அதிகம், ஈரக்கழிவுகள், துர்நாற்றம், கொசு, ஈ போன்ற குறைபாடுகளும் உள்ளன. இவற்றில் சில பிரச்சனைகளுக்கு உயர்த்தப்பட்ட கூண்டு முறை சிறந்தது. 4 கோழிக் கூண்டு வீடுகள் பண்ணைக்குப் போதுமானது. நான்கு கூண்டு முறையின் அளவுகள் முறையே.

நீளம்                                   45 செ.மீ (முன்பக்கம்)
உயரம் (பின்பகுதியில்)        38 செ.மீ
உயரம் முன்பகுதியில்          42 செ.மீ
அகலம்                                42 செ.மீ

எனினும் உயரத்தை அளவிட 2 முறைகள் உள்ளன. கூண்டின் தரை முன்பகுதி நோக்கி சரிந்து இருக்கும். பொதுவாக முட்டையிடும் கோழிகளுக்கான தரையமைப்பு இணைக்கப்பட்ட கம்பி வலையாக இருக்கும். சில இடங்களில் இக்கம்பிகள் பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டிருக்கும். தரைக் கம்பி 14 கஜமுள்ள கம்பிகளாக இருப்பது சிறந்தது. வலைச்சல்லடை அளவு 2.5x5.0 செ.மீ (1 x2”) கூண்டின் முன்பக்கம் கூண்டையும் தாண்டி வலையமைப்பு சிறிது நீண்டிருக்கும். இதன் வழியே முட்டைகளை எளிதில் சேகரித்துக் கொள்ளலாம். இந்து நீண்ட அமைப்பு 18 செ.மீ தூரம் சற்று வளைந்து காணப்படும். குறைந்த அளவு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கோழிகளை வளர்க்க ஏதுவாக ஒரு அடுக்கு, இரண்டு மற்றும் 3 அடுக்கு வரை அமைத்துக் கொள்ளலாம்.
கூண்டானது தரையிலிருந்து 1 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். எச்சங்களைச் சேகரிக்கக் கூண்டின் அளவிற்கேற்ப தரையில் 30 செ.மீ ஆழத்திற்கு குழி அமைத்தல் சிறந்தது.
நீளமான, தொடர்ச்சியான தீவனத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீரானது நீளவாக்கில் அமைக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ச்சியாக வழங்கப்படவேண்டும். தீவனத் தொட்டிக்கு மேலே கூண்டிற்கு வெளிப்புறப் பகுதியில் நீர்க்குழாய்கள் செல்லுமாறு வைத்தல் வேண்டும். ஆங்காங்கு கீழே வரும் குழாய்களில் துளையிட்டு அடைப்புடன் நீர்த் தேவையான அளவு சொட்டுசொட்டாக வரும்படி வைத்தல் வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும்.
இனவிருத்திக் கோழிகள் பராமரிப்பு
இக்கோழிகள் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருவாரியான முட்டைகளில் இருந்து நல்லக் குஞ்சுகளைப் பெறவேண்டுமெனில் முறையான பராமரிப்பு அவசியம். இனச்சேர்க்கைக்கென தனியாக சேவல்கள் வளர்க்கப்படவேண்டும். இவ்வாறு இனச்சேர்க்கை சேவல்களை எடைக் குறைந்த இனங்களுக்கு சேவல்,பெட்டைக் கோழிகள் விகிதம் 1:10 என்றும் எடை மிகுந்த இனங்களுக்கு 1:8 என்றும் இருக்குமாறு 20வது வாரத்தில் விடவேண்டும். 24வது வாரத்திலிருந்து முட்டைகளை சேகரித்துக் கொள்ளலாம். புல்லோரம் கழிச்சல் நோய் மற்றும் மைக்கோபிளாஸ்மாசிஸ் போன்ற நோய்கள் தாக்காமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
கோழிகளின் ஆரோக்கியத்திற்கும், அதிகமாகக் பொரிக்கும் திறனுக்கும் நன்கு சுத்தமான உலர்ந்த கூளங்களைப் பயன்படுத்துதல் அவசியம். அடைக்காக்க வைக்கப்படும் முட்டைகள் புதிதாக இடப்பட்டவையாகவும், ஓடுகள் தரமாகவும் (கெட்டியாகவும்) இருக்கவேண்டும். 5 கோழிகளுக்கு ஒரு கூடு என்ற அளவில் கூடுகள் தேவைப்படும்.
இறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு
இறைச்சிக் கோழிகள் பொதுவாகவே விரைவில் வளரக் கூடியவையாக இருக்கும். உடல் வளர்ச்சியும் இனப்பெருக்கத் திறனும் ஒன்றுக்கொன்று எதிரெதிராக அமைந்திருக்கும். எனவே உடல் வளர்ச்சி அளவுக்கு மீறி மிகுந்துவிடாமல் சரியான அளவு உணவுக் கொடுக்கவேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டின் நன்மைகள்
  • அனைத்துக் கோழிகளும் ஒரே அளவில் இருக்கும்.
  • உணவைக் குறைக்கும் போது இடும் முட்டையின் அளவு ஆரம்பத்தில் சற்று பெரியதாக இருக்கும்.
  • பருவமடையும் போது உடல் எடை (சரியாக) குறைந்து இருக்கும்.
  • முட்டையிடும் காலம் அதிகமாக இருக்கும்.
  • கருத்தரித்தல் மற்றும் குஞ்சு பொரிக்கும் தருணங்களில் அதிகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
  • அதிகத் தீவனம், உண்பதால் வரும் கால் நோய்கள், பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • அதிக தீவனத்தால் சில சமயங்களில் கோழிகள் இறக்க நேரிடலாம்.
  • சேவல்கள் அதிக எடையுடன் இருந்தால் இனச்சேர்க்கை செய்வது கடினம். இது போன்ற பல பிரச்சனைகளை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தவிர்க்கலாம்.
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள்
இரண்டு முறைகள் உணவுக் கட்டுப்பாட்டில் பின்பற்றப்படுகின்றன.
  • ஒரு குறிப்பிட்ட இனத்தின் உடல் எடை அதிகரிப்பை அட்டவணையுடன் ஒப்பிட்டு அதை விட அதிகமாக இருப்பின் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு நாள் உணவை நிறுத்தி ஒரு நாள்விட்டு, ஒரு நாள் என்று மாற்றி உணவிடலாம் அல்லது வாரத்திற்கு 2 நாட்கள் என்றவாறு குறைத்துக் கொள்ளலாம்.
  • உணவுக் குறைப்புத் திட்டத்தின் முக்கிய அம்சம் வாரம் ஒரு முறை எடைச் சரிபார்த்தலே ஆகும். எனவே மாதிரிப் பறவைகளை முன்பே எடையிட்டு பிற கோழிகளும் அந்த எடையில் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். மாதிரியாக எடுத்துக் கொள்ளும் கோழிகள் ஒப்பிட்டுப் பார்க்கும் கோழிகளின் அதே இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கவேண்டும்.
(ஆதாரம்: கேரள வேளாண் பல்கலைக்கழகம்)

பயனற்ற கோழிகளை நீக்குதல்
பயனற்ற, உற்பத்தியற்ற கோழிகளை வருடம் ஒரு முறை நீக்குதல் சிறந்தது. உடல் கோளாறுகள், உடற்செயலை பாதிக்கும் அல்லது சரிப்படுத்த இயலாத நோய்கள் கொண்ட, முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்ட பறவைகளை நீக்கி விடுதல் வேண்டும். வெளிப்புறத் தோற்றக் குறைபாடுகள் சில சமயம் முட்டை உற்பத்தியைப் பாதிக்காது. இதைச் சோதிக்க முட்டையிடும் கொட்டகையில் வைத்துச் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். இவற்றைப் பார்த்து இரவில் நீக்கம் செய்வத தொந்தரவைக் குறைக்கும்.

வெளித்தோற்ற அடிப்படையில் நீக்குதல்
வெளித்தோற்ற அமைப்பு உற்பத்தியை அதிகம் பாதிக்காது எனினும் கோழியின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலைக் குறித்துத்தெரிந்து கொள்ள இது உதவும் நல்ல முட்டை உற்பத்திச் செய்யும் கோழிக்கும் சாதாரண கோழிக்கும் உள்ள வேறுபாடு.

பண்புகள்
முட்டையிடும் கோழி முட்டையிடாத கோழி
கொண்டை மற்றும் தாடி முழுவதும் சிவப்பு நிறமாக மெழுகு போன்ற, வெல்வெட். வறண்ட, சுருங்கிய சற்று கடினமான.
அலகு நன்கு வளைந்து, சிறிது மஞ்சளாக, நல்ல தேகத்துடன், தேய்ந்து காணப்படும். நீண்டதாக, மெல்லிய கூரிய முனையுடன், நல்ல மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும்.
கண்கள் பளிச்சென்று எப்போதும் விழிப்புடன் இருக்கும். சோர்ந்து தூங்குவது போல் இருக்கும்.
காது மெழுகு போன்று வெல்வெட் தன்மையுடன் முழுமை பெற்றிருக்கும். சொரசொரப்பாக சுருங்கி இருக்கும்.
இடுப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள எலும்பு விரிந்த நிலையில் (இரு விரல்கள்) மெல்லிய வளையும் தன்மையுடையதாக இருக்கும். சற்று மூடிய நிலையில் கெட்டியானதாக இருக்கும்.
வயிறு 3-5 விரல்கள் அளவு பெரிதாக விரிந்து, குறைந்த கொழுப்புடன் மென்மையானதாக இருக்கும். 2 விரல் அளவுக்குக் குறைவாகவே இருக்கும். அதிகக் கொழுப்புடன் கடினமானதாக இருக்கும்.
கழிவுத்துவாரம் / எச்சவாய் பெரிதாக ஈரப்பதத்துடன் இருக்கும். சிறியதாக உலர்ந்து சுருங்கிக் காணப்படும்.
இறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்
இறகு உதிர்வது கோழி முட்டையிடுவதன் ஒரு அறிகுறி ஆகும். நல்ல முட்டை உற்பத்தியுள்ள கோழிகள் தாமதமாக இறகை உதிர்க்க ஆரம்பித்தாலும்  விரைவில் உதிர்ந்து விடும். சில சமயம் இறகு உதிர்ந்து கொண்டிருக்கும் போதே முட்டையிட ஆரம்பித்து விடும். ஆனால் முட்டை இட இயலாத கோழிகள் முன்னதாகவே ஆரம்பித்து நீண்ட நாட்களுக்கு இறகை உதிர்த்துக் கொண்டே இருக்கும். ஆனால் முட்டை இடாது. இறக்கையில் இருந்து உதிர ஆரம்பிக்கும் கடினமான முதல் நிலை இறகுகளை எண்ணுவதன் மூலம் கோழியின் தன்மையை அறிந்து கொள்ள இயலும். முதலில் உள் இறகும் பின்பு மைய இறகு உதிர ஆரம்பிக்கும். புதிய முதல் நிலை இறகுகள் 6 வாரத்திலும் பின்பு வளர்ந்த இறகுகள் அடுத்த 2 வாரத்திலும் உதிரும். இறகு உதிரும் (சமயங்களில்) காலத்தில் 4 புதிய முதல் நிலை இறகுகளுடன் இருந்தால் கோழியானது இறகு உதிர்வதன் 12வத வாரத்தில் இருப்பதாகக் குறிக்கும்.
ஒரு வருட உற்பத்திக்குப் பின் முட்டை உற்பத்தி குறையத் தொடங்கிவிடும். அதன் பின் அக்கோழிகளைப் பராமரிப்பது பொருளாதார ரீதியில் இலாபகரமானதாக இருக்காது. ஏதேனும் கால்மோனைல்லா போன்ற நோய் பரவத் தொடங்கினால் உடனே அனைத்தையும் அழித்து விடுதல் நன்று.

(ஆதாரம்: டாக்டர். ஆச்சார்யா, Handbook of Animal Husbandary)
முட்டைப்பராமரிப்பு
முட்டைகள் நல்லச் சுகாதாரமான சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படவேண்டும். நல்லத் தரமான கரு முட்டைகள் சீக்கிரம் கெட்டுவிடும். முட்டைக்கூடுகளில் நல்ல சுத்தமான கூளங்களையே இட்டு வைக்கவேண்டும். கோழிக் கொட்டகையிலிருந்து குறைந்தது நாளொன்றுக்கு 3 முறையாவது இடப்பட்ட முட்டைகளை சேகரித்துக் குளிர்ந்த இடத்தில் பாதுகாக்கவேண்டும். சற்று வெப்பமான சூழ்நிலைகளில் 4 அல்லது 5 முறை முட்டைகளை சேகரிக்கவேண்டும்.
முட்டைகளைக் கவனமாகக் கையாளவேண்டும். நல்ல சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன வலை அமைப்புப் பெட்டிகளிலோ, முட்டைக் குழித்தட்டுக்களிலோ சேகரித்து வைக்கலாம். மாசடைந்த முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பராமரிப்பு முறைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று சரிபார்க்கவேண்டும்.

Egg management
முட்டைப்பராமரிப்பு
கோடை காலப்பராமரிப்பு
முட்டையிடும்  கோழிகள் 23.8 செல்சியலிருந்து 29.4 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பநிலையை தாங்கக்கூடியது. முட்டையிடும் கொட்டகையின் வெப்பநிலை 32.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகும் போது கோழிகளின் உணவு உட்கொள்வது குறைந்து முட்டை உற்பத்திக் குறையும். 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் போகும் போது இறப்பு  வீதம் அதிகரிக்கும். மேலும் இடும் முட்டைகளின் தரமும் குறையும். எனவே கோடைக்காலங்களில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அவையாவன.
  • குளிர்ந்த சுத்தமான குடிநீர் தாராளமாக வழங்கப்படவேண்டும். முடிந்தால் குடிநீரில் ஐஸ்கட்டிகளை உடைத்துப் போட்டு குளிர்ந்த நீராகக் கொடுக்கலாம்.
  • கோழிப்பண்ணை முழுவதும் ஆங்காங்கு நிழல் தரும் மரங்கள் இருக்கவேண்டும்.
  • கூரைமீது அவ்வப்போது நீரைத் தூவுமாறு குழாய் அமைக்கலாம். இவ்வாறு கூரையின் மேல் நீர்த்தெளிப்பது வெப்பத்தைக் குறைக்க உதவும்.
  • கம்பிவலை அமைப்புத் தேவைப்படும்போது சுத்தம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல காற்றோட்டம் இருக்கும்.
  • பழையக் கூளங்களின் அடர்த்தியைக் குறைக்கவேண்டும். பழையக் கூளங்கள் நீக்கப்பட்ட இடத்தில் 2 அளவிற்குப் புதிய கூளங்களைப் பரப்பவேண்டும்.
  • அதிகாலை நேரத்தில் செயற்கை ஒளிவிளக்குகளைப் போட்டு வெளிச்சம் அளிப்பதன் மூலம் கோழிகள் குளிர்ச்சியான நேரத்தில் அதிகத் தீவனம் எடுத்துக்கொள்ளும்.
  • தீவனத்தில் அதிகக் குருணை சேர்ப்பதன் மூலம் கோழிகளுக்குக் கால்சியம் சத்துக் கிடைக்கும். இதனால் முட்டையின் ஓடுகள் சற்று கடினமாக எளிதில் உடையாததாகக் கிடைக்கும்.
  • எலைக்டிரோலைட், விட்டமின் சி, நுண்ம உயிரிக்கலவைகள் போன்றவற்றை நீரில் கலந்து கொடுப்பதால் வெப்பத்தாக்கம் சற்றுக் குறையும்.
  • மின்விசிறி வசதி அமைத்தல் சிறந்தது.
  • நாளின் குளிர்ந்த காலை, மாலை வேளைகளில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தீவனங்களை அளிக்கவேண்டும்.
  • கொட்டகையின் பக்கங்களில் ஈரமான சாக்குப் பைகளைத் தொங்கவிடுதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
  • மண் பானைகளில் நீரை வைத்தால் எப்போதும்  குளிர்ந்து இருக்கும்.
  • தெளிப்பான்களை கொட்டகையினுள் ஆங்காங்கு அமைக்கவேண்டும்.
(ஆதாரம்: www.vuatkerala.org)






இறைச்சிக் கோழி வளர்ப்பு:


 
இறைச்சி / கறிக்கோழி
இறைச்சிக் கோழிகள் என்பவை இறைச்சித் தேவைக்காக (கறிக்காக) வளர்க்கப்படுபவை. 6லிருந்த 8 வாரங்கள் வயதுடைய இளம் ஆண் மற்றும் பெண் கோழிகள் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

பண்ணை / கொட்டகை அமைப்பு
ஒரு குஞ்சுக்கு 930 செ.மீ 2 என்ற அளவில் நல்ல காற்றோட்டமான இடவசதி தேவை. பிற கொட்டகைப் பராமரிப்புகள் முட்டைக் கோழிகளைப் போலவே பின்பற்றப்படுகின்றன.

உணவூட்டம்
2 வாரம் வரையிலும் 5 செ.மீ அளவும் 3 வது வாரத்திலிருந்து 10 செ.மீ அளவும் ஒரு குஞ்சுக்குக் கொடுக்கவேண்டும். குஞ்சு வளர வளர தீவன அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தீவனத்தொட்டியை பாதிக்கு மேல் நிரப்பக்கூடாது. குழாய் தீவன முறையாக இருப்பின் 100 குஞ்சுகளுக்கு 12 கிலோகிராம் தீவனத்தை 3 முறையாகப் பிரித்து அளிக்கவேண்டும்.
இறைச்சிக் கோழித் தீவனக்கலவை

சேர்க்கும் பொருட்கள்
சேர்க்கவேண்டிய அளவு
ஆரம்பித்தல் (0-5 வாரங்களில்)
முடிவில் (6-7 வாரங்களில்)
மஞ்சள் சோளம்
47.00
54.50
தீட்டப்பட்ட அரிசி
8.00
10.00
சோயாபீன் துகள்
17.50
14.00
கடலைப்புண்ணாக்கு
15.00
11.00
உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன்
10.00
8.00
தாதுக்களின் கலவை
2.00
2.00
உப்பு
0.50
0.50
மொத்தம்
100.00
100.00
இது தவிர வெளியில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து விற்கும் வணிக ரீதியான கலப்புத் தீவனங்களையும் அளிக்கலாம்.
நீர்
  • 2x2 லிட்டர் கொள்ளளவுள்ள நீர்த்தொட்டியில் 2 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு வைக்கலாம்.
  • 3 வார வயதுடைய குஞ்சுகளுக்கு 2 x5 லிட்டர் அளவு கொண்ட தொட்டிகளில் அளிக்கவேண்டும்.
  • எப்போது புதிய, தூய தண்ணீரை வழங்கவேண்டும்.
  • அடைகாக்கும் தருணங்களில் சரியான கவனிப்பும் நீர் ஆகாரமும் அவசியம். குஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கை 2 சதவிகிதத்திற்கு அதிகமாக இருந்தால் அடைகாப்புப் பராமரிப்புகள் முறையாக இருக்கின்றனவா என்றும், இறந்த குஞ்சுகளின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகளையும் வைத்து  இறப்புக்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்தல் வேண்டும்.
  • அடைக்காப்பானில் வெப்பநிலைய வாரத்திற்கு 3 செல்சியஸ் என்ற அளவில் குறைத்துக் கொண்டே வரவேண்டும். அடைக்காப்பானை நீக்கும் போது குஞ்சுகளுக்கு 40 வாட்ஸ் ஒளி விளக்கு என்ற அளவில் வெளிச்சம் வழங்கப்படவேண்டும்.
  • 100 கோழிகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவு மற்றும் நீரின் அளவை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட சூத்திரத்தின் மூலம் அறியலாம்.
  • 100 கோழிகளுக்குத் தேவையான தீவனம் கிலோகிராமில் வயது நாட்களில் 14.4
  • நீரின் அளவு லிட்டரில் (100 கோழிகளுக்கான) வயது நாட்களில் 12.0
  • சாதாரண சூழ்நிலையில் மேற்கண்ட சூத்திரத்தின்படி கணக்கிட்டுக் கொள்ளலாம். பருவ நிலை (அ) தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து 5-10 சதம் வரை வேறுபடலாம்.
இறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை
வயது
நோய்
தடுப்பூசி மருந்து
செலுத்தும் வழி
0-5 நாட்கள்
வெக்கை நோய்
லசோட்டா (அ) எப் தடுப்பு மருந்து
கண் / மூக்கு
10-14 நாட்கள்
குடல் அழற்சி நோய் (IBD)
ஐபிடி (உயிர்)
குடிதண்ணீர்
24-28 நாட்கள்
குடல் அழற்சி நோய்
ஐபிடி (உயிர்)
குடிதண்ணீர்
குஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி
இதற்கென சேவல்கள் தனியே பராமரிக்கப்படவேண்டும். 100 பெட்டைக் குஞ்சுகளுக்கென 15 சேவல் குஞ்சுகள் வளர்க்கப்படவேண்டும். இந்த 15 குஞ்சுகளில் 10 வார வயதில் 12 சேவல் குஞ்சை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும். கலப்பிற்காக எடைக் குறைந்த இனமாக இருந்தால் 10-15 பெட்டைக் குஞ்சுகளுடன் ஒரு சேவலையும், எடை மிகுந்த  இனமாக இருந்தால் 6-8 பெட்டைகளுக்கு ஒரு சேவலையும் விடலாம். கலப்பிற்கு விட்ட 2 வாரங்களுக்குப் பிறகு முட்டையை சேகரிக்கத் தொடங்கலாம்.
முட்டைகளை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை சேகரிக்க வேண்டும். சேகரித்த முட்டைகளை 1016 டிகரி செல்சியஸ் வெப்பநிலையில் 70-80 சதம் ஈரப்பதமுள்ள இடத்தில் வைக்கவும். முட்டைகளின் எடை, நிறம், தன்மை, வடிவம் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பிரித்து  வைக்கவும். சேமித்து வைக்கும் போதும், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றும் போதும் கவனமாக அகண்ட பகுதியைத் தொட்டுக்  கையாளுதல் வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அடை காக்கவோ அல்லது முட்டை சந்தைக்கோ அனுப்பி விடலாம். 1 வார காலத்திற்கு மேல் சாதாரண சூழ்நிலையில் அடை காக்கும் காலம் 21 நாட்களாகும். குஞ்சு பொரிப்பதற்கான குறிப்பிட்ட, காற்றோட்டமும், மித வெப்பநிலையும் கொண்ட சூட்டில் நிலவவேண்டும்.
குஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை

வெப்பநிலை
1-18 நாட்கள்
19-21 நாட்கள்
37.5-37.8 டிகிரி செ
36.9-37.5 டிகிரி செ
ஈரப்பதம்
60 சதவிகிதம் 18 நாட்கள் வரை
70 சதவிகிதம் அதற்கு மேல்
திருப்பி வைத்தல்
18 நாட்கள் வரை ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கொரு முறை
-
காற்றோட்டம்
1-18 நாட்கள்
19-21 நாட்கள்
8 மாற்றம் / மணிக்கு
12 மாற்றம் / மணிக்கு
(ஆதாரம்: கேரளா வேளாண் பல்கலைக்கழகம்)

ஒளியில் கருவளர்நிலைக் காணல்
அடைகாத்தலின் போது இரு முறை இவ்வாறு ஒளியில் வைத்தல் வேண்டும். முதல் முறை 7வது நாளிலும் இரண்டாவது முறை 18-19வது நாளிலும் ஒளி அளித்தல் அவசியம். இவ்வாறு 18 வது நாளில் ஒளியில் கருவளர்நிலைக் கண்டபின் குஞ்சு பொரிப்பகத்திற்கு மாற்றி விடலாம்.

நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்
ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன.
  • ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
  • பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும்.
  • ஒரு நல்லக் கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
  • பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக்  கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும்.
  •  ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை  அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று.
  • இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட.
  • 1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
  • உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
  • பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
  • ஈரமானக் கூளங்களை  உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை  சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும்.
  • நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து  அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் நோய்பரவல் அல்லது தாக்கம்  தெரிந்தால் உடனே  தேவையான நடவடிக்கைகளை உடனே
பூஞ்சை நச்சு / காளான் நச்சு
கோழிக்குஞ்சுகளின் தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி வளர்ச்சியைப் பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை அதிகம் பாதிக்கிறது.

எனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல்  பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத்  தீவனத்தில் கலப்பதும் சிறந்தது.

கிருமிநாசினிகளும் பயன்பாடும்


1.லைசோல்
1-2 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள், நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.

2.சுண்ணாம்புப் பொடி
சுவர்களைச் சுத்தம் செய்யப் பயன்படும் மலிவான கிருமிநாசினி 2-5 சதவிகிதம்
லாசோட்டா வெள்ளைக் கழிச்சல் (தேவைக் குறிப்புகள்)
குடிநீரில் கலந்து
20வது வாரம்
லாசோட்டா (தேவை ஏற்படின்)
குடிநீரில் கலந்து
40வது வாரம்
கரைசல் கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது. தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.

3.சலவை சோடா
இது கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது.

4.ஃபினால்
நச்சுத்தன்மை குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும் சுத்தப்படுத்தலாம்.

கோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்
மருந்தின் பெயர்
செலுத்தும் வழி
கோழியின் வயது
லாசோட்டா எஃப் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து
மூக்கு
3-7 நாட்களில்
கோழி வாத நோய் தடுப்பு  மருந்து (குஞ்சு பொரிப்பகத்தில்)

1 நாள்
மூச்சுக் குழல் அழற்சி மருந்து (முதல் வேளை)
கண்களில்
2-3 வாரங்கள்
லா சோட்டா வெள்ளைக் கழிச்சல் மருந்து
குடிநீரில் கலந்து
5-6 வாரங்கள்
கோழி அம்மை
(முதல் வேளை)

7-8 வாரங்கள்
ஆர்2பி வெள்ளைக் கழிச்சல்

9-10 வாரங்கள்
ஆர்2பி வெள்ளைக் கழிச்சல் மூச்சுக் குழல் அழற்சி மருந்து
கண்கள் / குடிநீரில் கலந்து
16 வாரங்கள்
கோழி அம்மை
(2வது தடவை)

18வது வாரங்கள்
கூடானது  அறை போல இருட்டாகவும், நல்ல காற்றோட்டத்துடன் கட்டிடத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கவேண்டும். கூடுகள் மலிவான மரத்தாலான 30x30x40 செ.மீ அளவில் அமைந்திருக்கலாம். சுத்தமான 1 கூடு என்றவாறு அமைக்கலாம். சுத்தமான கூடுகளைப் பயன்படுத்தி அவற்றை அவ்வப்போது மாற்றவேண்டும். தேவைப்படின் கூளங்களை மாற்றிவிடவேண்டும்.

ஒளி
சரியான ஒளி அளவு முட்டையிடும் கோழிகளுக்கு மிகவும் அவசியம். வளரும் கோழிகளுக்கு இல்லாவிட்டாலும் முட்டையிடும் வளர்ந்த கோழிகளுக்கு 22வது வாரத்திலிருந்து வாரத்திற்கு 15 நிமிடங்கள் என்று மொத்தம் 16 மணி நேரம் (செயற்கை மற்றும் இயற்கை ஒளி) ஒளிக்காலம் அளிக்கப்படவேண்டும். 6 மாதத்தில் முட்டையிடும் கோழிக்கு 17 மணி நேரம் ஒளியானது நாளொன்றுக்குத் தேவைப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாளொன்றுக்கு 17 மணி நேரம் ஒளி கோழிகளுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும்.

தீவன மேலாண்மை
முட்டையிடும் கோழிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அரைக்கப்பட்ட தானியங்களை உணவாகக் கொடுக்கவேண்டும்.

முட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்
தீவனங்கள்
அளவு (சதவிகிதம்)
மஞ்சள் சோளம்
47
சோயாபீன் துகள்
12
எள்ளுப் புண்ணாக்கு
4
கடலைப் புண்ணாக்கு
6





கோழிக்குஞ்சு பராமரிப்பு:

 
புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு
  • குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
  • குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
  • கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
  • எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
  • வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
  • குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
  • குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
  • சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
  • சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
  • குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
  • குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில்  ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
  • கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
  •  மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
  • ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.
poultry_chicks
புதிதாக பொரிக்கப்பட்ட குஞ்சுகள்
(ஆதாரம்: டாக்டர். பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்வேளாண் கல்லூரி, மதுரை.)

வளரும் குஞ்சுகள் பராமரிப்பு
6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கி விடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கி விடவேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095-0.19 மீ 2 என்ற அளவு இடவசதி இருக்கவேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கவேண்டும். கலப்புத் தீவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய (பொருட்கள்) தீவனங்களாவன.
தீவனப் பொருட்கள்
அளவு (சதவிகிதம்)
மஞ்சள் சோளம்
43
கடலைப்புண்ணாக்கு
8
எள்ளுப் புண்ணாக்கு
5
மீன் துகள் உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன்
6
அரிசி (பாலிஸ் செய்யப்பட்டது)
16
கோதுமைத் தவிடு
20
உப்பு
0.25
தாதுக் கலவை
1.75
மொத்தம்
100.00
வளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை

வயது (வாரங்களில்)
உணவுத் தேவை (கிராம் / கோழி / நாள்)
10
53.0
11
58.0
12
60
13
60
14
60
15
62
16
62
17
65
18
70
19
75
20
75
நீர் மற்றும் தீவனம்
தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ  எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.
poultry chicks feeding
நீர் மற்றும் தீவனம்
நோய்க்கட்டுப்பாடு
பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி தடுப்பூசிகளும், குடற்புழுநீக்க மருந்துகளும் அளிக்கவேண்டும்.
அலகு நீக்கம் செய்தல்
அலகை நீக்குவதால் தீவன விரயம் மற்றும் தன் இனத்தைத்  தானே உண்ணுதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். மின்சார அலகு நீக்கி கொண்டு நீக்குவது நல்லது. மேல் அலகில் மூன்றில் ஒருபங்கும் கீடை அலகில் சிறிதளவு மட்டும் நீக்கவேண்டும். இது குஞ்சு பொரித்து, ஒரு வாரக் காலத்திற்குள் செய்து விடவேண்டும். மீண்டும் ஒரு முறை முட்டியிடுவதற்கு முட்டையிடும் கூண்டிற்குள் விடுமுன் 16 வார வயதில் அலகு நீக்கம் செய்யவேண்டும். கொல்லைப்புற முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அலகு நீக்கம் செய்தல் கூடாது. நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற ஒருவர் மட்டுமே இதைச் செய்யவேண்டும்.
poultry_debeaking
அலகு நீக்கம்
கொண்டை நீக்கம்
கொண்டையானது தொங்கிக் கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்து விடவேண்டும்.

ஒளி
முட்டை உற்பத்திக்கென வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரவில் வெளிச்சம் தேவைப்படுவதில்லை.

(ஆதாரம் : www.vuatkerala.org)
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள்:

ஆற்றல் அளிப்பவை

1.எண்ணெய் நீக்கப்பட்ட சால்விதைத்தூள்
சால் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் உபபொருட்களே இத்தூள்கள். இவை பார்ப்பதற்கு தானியங்களைப் போல் இருக்கும். இதில் டேனின் அதிகம் இருப்பதால் குறைந்தளவே தீவனத்தில் பயன்படுத்தவேண்டும்.

2.மரவள்ளித்தூள்
இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில் சைனோஜென்க் என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி, கூடு செய்வதன் மூலம் இதைப் போக்கலாம்.

3.உலர்த்திய கோழிக்கழிவுகள்
கலப்படமற்ற கூண்டு முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் கழிவுகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் 10-12சதவிகிதம் தூய புரதம் உள்ளது. இது சரியாகச் சுத்தம் செய்யப்பட்டால் தீவனக் கலவையில் 10 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

4.கரும்புச்சக்கை
தானிய வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற வாய்ப்புள்ளது.

5.சிறுதானியங்கள்
சாமை,பனிவரகு போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். ராகி,கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது.

காய்கறிப் புரதங்கள்
Poultry_feed

1.கடுகுப் புண்ணாக்கு
இரு கடலைப் புண்ணாக்கைக் காட்டிலும் புரதம் மற்றும் லைசின் அளவு மிகுந்துள்ளது. எனினும் கிளைக்கோசைட்ஸ் மற்றும் காய்ட்டிரோஜன் உள்ளதால் இதைப் பதப்படுத்தினாலும் 5 சதவிகிதம் பயன்படுத்தக்கூடாது.
2.சோயாபீன் தூள்
சோயாபீனில் 35-40 சதவிகிதம் புரதமும், 18-21 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. எண்ணெய் எடுக்க பல முறைகள் உள்ளன. சோயாபீன் எண்ணெய் பிழிந்து எடுக்கும் போது கிடைக்கும் தூளில் 42 சதவிகிதம் புரதமும் 5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. சரியான சூடுபடுத்தும் முறை மூலம் இதன் புரதத்தன்மையை உயர்த்தலாம். சோயாபீனானது உயர் இரக புரதத்தைக் கொண்டுள்ளது. இதிலிருந்து லைசின் அர்ஜினைன், கிளைசின், டிரைப்டோபன், சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்களைப் பெறலாம்.

3.எள்துகள்
இதில் அர்ஜினைன், மெத்தியோனைன் மற்றும் டிரைப்டோபன் போன்ற அமினோ அமிலங்களும் புரதமும் அதிக அளவில் உள்ளது.

4.கொத்தவரை
கொத்தவரையிலிருந்து தாவரக் கோந்து தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருளில் புரோட்டீன் மிகுதியாக உள்ளது. இதில் டிரிப்சின் தடுப்பான் இருப்பதால் சிறிதளவே பயன்படுத்தவேண்டும்.

5.சூரியகாந்தி விதைத் தூள்
நிலக்கடரைத் தூளை விட இதில் ஊட்டச்த்துக்கள் அதிகம். எனினும் இதன் அதிக நார்ச்சத்தால் இது கோழித்தீவனத்தில் சேர்க்கப்படுவதில்லை. சோயாபீனை விட இதில் மெத்தியோனைன் மற்றும் அர்ஜினைன் அதிகமுள்ளது. லைசின் மிகக் குறைவு. மேலும் இது பாண்டதொனிக் அமிலம் மற்றும் நியாசினுக்குச் சிறந்த ஆதாரம்.

6.செந்தூரகத்தூள்
இதுவும் நிலக்கடலைத் தூளுக்குப் பதிலாக 25 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகமாகப் பயன்படுத்தினால்  லைசின் பற்றாக்குறை ஏற்படும்.

7.ராம்டில் புண்ணாக்கு
கோழிக்குஞ்சுகளுக்கும், முட்டைக் கோழிகளுக்கும் தீவனமாக 50-100 சதவிகிதம் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன.

8.பருத்திப் புண்ணாக்கு
புரதம் அதிக அளவில் இருந்தாலும் லைசின் அளவு குறைவாகவே இருக்கும். 15 சதவிகிதம் வரை இப்புண்ணாக்கைப் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால் முட்டையின் மஞ்சள் கருவில் சிறு கட்டி போன்று தோன்றும்.

9.சோளம் குளூட்டன் துகள்கள்
சோள மாவுத் தொழிற்சாலையின் உபபொருளான இதில் புரோட்டீன், சாந்தோஃபில் நிறைந்துள்ளது.

10.பெனிசிலியம்-மைசிலியம் கழிவுகள்
இது பென்சிலின் தயாரிப்பில் வெளிவரும் கழிவு ஆகும். இதில் புரதம் மற்றும் எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளதால் 5  சதம் வரை கலப்புத்  தீவனத்தில் பயன்படுத்தலாம்.

11.ஆளிவிதைத் துகள்கள்
இதில் டிரைப்டோபன் நிறைந்துள்ளது எனினும் சையனோஜெனிக் கிளைக்கோஸைடு மற்றும் ஏன்டிபைரிடாக்ஸியல் காரணிகள் நிறைந்துள்ளதால் 5 சதவிகிதம் மேல் உபயோகிக்கக்கூடாது. இதை வேக வைத்துக் கொடுப்பதால் விஷத்தன்மை குறையும்.

விலங்குப் புரதங்கள்
1.இரத்தத் துகள்
இதில் 80 சதம் புரதமும், லைசின், அர்ஜினைன், மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் லியூசின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஐசோலியூசின் மட்டுமே இருப்பதில்லை. இதன் சுவைக் குறைவாக இருக்கும். 2-3 சதவீதம் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

2.கல்லீரல் கழிவுத் துகள்
லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், டிரைப்டோபன் மற்றும் அதிக அளவு ரிபோஃபிளேவின், கோலைன் மற்றும் விட்டமின் பி12.

3.பட்டுப்பூச்சியின் கூட்டுப்புழுக் கழிவு
எண்ணெய் நீக்கப்பட்ட கூட்டுப்புழுவின் கழிவில் புரதம் மிகுந்துள்ளது. அதிக நார்ச்சத்து உள்ளதாலும் இதன் புரதம் செரிப்பதற்குக் கடினமாக இருப்பதாலும் இதன் பயன்பாடு கோழித்தீவனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

4.அடைகாப்பகத்தின் கழிவுகள்
குஞ்சு பொரிக்காத முட்டைகள், கொல்லப்பட்ட குஞ்சுகள், இறந்த சினைக்குஞ்சுகள், இளம் கருக்கள் போன்றவற்றைச் சேகரித்து வேக வைத்து, அரைத்து கொழுப்பு நீக்கியோ அல்லது நீக்காமலோ கோழிகளுக்கு அளிக்கலாம். பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து 25-34 சதவிகிதம் பண்படா புரதத்தைப் பெற்றிருக்கும்.

5.இறகுத் துகள்கள்
80-85 சதவிகிதம் புரதம் அடங்கியுள்ளதால் இதைத் தீவனத்தில் 5 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

6.கோழிப்பண்ணைக் கழிவுகள்
கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளின் 15 சதவிகிதம சாம்பல் சத்து இருக்கும். இதில் புரதம் 55-60 சதமும் கொழுப்பு 12 சதமும் இருக்கும்.

7.இறைச்சி மற்றும் எலும்புத் துகள்
இதில் அதிகப் புரதம் மட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் அதிகம் அடங்கியுள்ளன. துகள்களில் அடங்கியுள்ள ஜெலாட்டின் அளவைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்துக் கலவை மாறுபடும். 5-10 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம்.

(ஆதாரம்: டாக்டர். ஆச்சார்யாHandbook of Animal Husbandary)